சென்னை: மறைந்த  கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளை (29.08.2020) சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் எம்.பி,  இன்று இரவு சுமார் 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 70 வயதான அவருடைய மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவரது உடல் நாளை காலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் முகப்பத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.