சென்னை: வள்ளலார் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின்  தனது சமூக வலைதளத்தில், ‘சமத்துவ நெறியைப் போற்றுவோம்’ என பதிவிட்டுள்ளார்.

“உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்” என ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் பிறந்த நாளை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5) கொண்டாடப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5, ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (அக்.5) முதல்வர் தனது எக்ஸ் தளத்தில்,

“நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று.

“உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!”

“மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என

அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்!

வாழ்க வள்ளலார்!”

எனப் பதிவிட்டுள்ளார்.