இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான குறிப்பு விதிமுறைகளை இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இருவரும் திங்களன்று புதுதில்லியில் நடத்திய பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் பரஸ்பர நன்மை பயக்கும் என்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கப் பொருட்களுக்கு புதிய சந்தைகளைத் திறப்பதன் மூலமும், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், சமநிலையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவை அடைய தற்போதைய பேச்சுவார்த்தைகள் உதவுகின்றன என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரேர் கூறினார்.
இதுவரை இந்தியாவின் ஆக்கபூர்வமான உரையாடல் வரவேற்கப்பட்டுள்ளது. “இரு நாடுகளிலும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“பரஸ்பர வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான வரைபடத்தை அமைப்பதற்கான விதிமுறைகளை USTR மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் இறுதி செய்துள்ளதை உறுதிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கிரேர் கூறினார்.
அமெரிக்க துணை அதிபரின் இந்திய விஜயம் மூலம் இந்தியாவுடனான வர்த்தக உறவுகளில் பரஸ்பர புரிதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.