போப் பிரான்சிஸ் வரலாற்றில் ஒரு ‘சீர்திருத்தவாத பாதிரியாராக’ இடம் பெறுவார். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த சில மரபுகளை உடைத்து, கத்தோலிக்க திருச்சபையை ‘இரக்கத்தின்’ மையமாக மாற்ற அவர்கள் கடுமையாக உழைத்தனர்.
“மக்களின் போப்” என்று அழைக்கப்படும் அர்ஜென்டினா பாதிரியார், ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தார். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் அவர் நேசிக்கப்பட்டாலும், திருச்சபைக்குள் உள்ள பழமைவாதிகளிடமிருந்தும் அவர் எதிர்ப்பைச் சந்தித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் முதல் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் வரை மிகவும் கடினமான வாழ்க்கையை வாழும் மக்களுடன் அவர் உறுதியாக நின்றார்.
போப் மரியோ பெர்கோக்லியோ (பிரான்சிஸ்) அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் பிறந்தார். இத்தாலியிலிருந்து குடிபெயர்ந்த ஒரு தம்பதியினரின் ஐந்து குழந்தைகளில் அவர் மூத்தவர். பள்ளி நேரத்திற்குப் பிறகு அவர் ஒரு நெசவுத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். ஒரு இளைஞனாக, அவர் ஒரு இரவு விடுதியில் சில நாட்கள் பவுன்சராகவும் பணியாற்றினார்.
கால்பந்து பிரியரான பிரான்சிஸ், சிறுவயதில் தனது தந்தையுடன் கால்பந்து போட்டிகளுக்குச் செல்வது வழக்கம்.
மார்ச் 2013 இல் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தனது முத்திரையைப் பதிக்க அவர் ஆர்வமாக இருந்தார்.
13 ஆம் நூற்றாண்டில் ஒரு போப்பாக இருந்த புனித பிரான்சிஸுக்குப் பிறகு, பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்ற முதல் போப் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஏழைகளுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தனது செல்வம் முழுவதையும் துறந்தவர் செயிண்ட் பிரான்சிஸ்.
“தேவாலயங்கள் ஏழைகளின் பக்கம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று 266வது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் கூறினார். ஆடம்பர வாழ்க்கை வாழ வாய்ப்பு கிடைத்த போதிலும், அதையெல்லாம் விட்டுவிட்டு எளிமையான வாழ்க்கையின் பாதையை எடுத்தார். அவர் விதவைகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மற்றும் கைதிகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வார்.
போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வத்திக்கானில் தனது முதல் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முன்பு, ரோமில் உள்ள சிறையில் இருந்த கைதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்டார். அவர் ஆரம்பத்திலிருந்தே முந்தைய போப்களை விட வித்தியாசமான பாதையில் நடந்து வருவதைக் காட்டி, உலகளாவிய பாராட்டைப் பெற்றார்.
பிரான்சிஸ் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்காக இத்தாலிய தீவான லம்பேடுசாவைத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் குடியேறிகள் இந்தத் தீவு வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைந்தனர். ஐரோப்பாவில் இடம்பெயர்வு நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, 2016 ஆம் ஆண்டு கிரேக்கத் தீவான லெஸ்போஸுக்கு அவர் விஜயம் செய்தார், மேலும் சிரியாவிலிருந்து புகலிடம் கோரி அங்கு வந்த மூன்று முஸ்லிம் குடும்பங்களுடன் ரோம் திரும்பினார்.
புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதை ‘ஒரு பெரிய நெருக்கடி’ என்று டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தை கண்டித்திருந்தார்.
பாதிரியார்களால் ஏற்படும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசினார், மேலும் பல பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
போப் பிரான்சிஸின் விமர்சகர்கள், அவர் கத்தோலிக்க போதனையின் கொள்கைகளை மிகவும் ஆபத்தான முறையில் மாற்றியமைத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். 2017 ஆம் ஆண்டில், நான்கு பழமைவாத கார்டினல்கள் போப்பிற்கு எதிராக வெளிப்படையாகப் பேசினர், அவர் அறிமுகப்படுத்திய மாற்றங்கள் விசுவாசிகளிடையே கோட்பாட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக புகார் கூறினர்.
விவாகரத்து செய்து மறுமணம் செய்து கொண்டவர்கள் புனித ஒற்றுமையைப் பெற பிரான்சிஸ் அனுமதித்திருந்தார். இதுபோன்ற பல பழமைவாத பிராம்பரியங்களில் சீர்த்திருத்தம் செய்ததை அடுத்து அவர் பலரிடம் இருந்து எதிர்ப்புகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது.