பிரயாக் ராஜ்

கா கும்பமேளாவையொட்டி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார்.

கடந்த 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

இதையொட்டி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

கும்பமேளாவில் இதுவரை சுமார் 9.24 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.  குறிப்பாக நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 43.18 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். தற்போதைய மகா கும்பமேளாவுக்கு சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மதியம் 2.15 மணியளவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைசர்களுடன் திரிவேணி சங்கமத்தில் உயர் பாதுகாப்புக்கு மத்தியில் புனித நீராடியுள்ளார்.