க்ரா

த்தரப்பிரதேச பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கிய வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த ராம்சங்கர் கதேரியா உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். ஆவார்.  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவரான இவர் மீது குற்ற வழக்கு உள்ளது.  கடந்த 2011ம் ஆண்டு தனியார் மின் நிறுவன ஊழியரைத் தாக்கியதாக ஆக்ரா காவல் நிலையத்தில் ராம்சங்கர் கதேரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை ஆக்ரா சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.  நேற்று இந்த வழக்கில் பாஜக எம்.பி. ராம்சங்கர் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.  எனவே குற்ற வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராம்சங்கரின் நாடாளுமன்ற உறுப்பினர். பதவி பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர். பதவி பறிக்கப்பட்டது.  உச்சநீதிமன்றம் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ள போதிலும், பறிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். பதவி இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.