வாஷிங்டன்

மெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்த மாளிகைக்கு மேல் விமானம் ஒன்று பறந்ததால் அதிர்ச்சி எழுந்துள்ளது.

வாஷிங்டனில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் டெலாவேர் பகுதியில் உள்ள ரெகோபாத் பீச் உள்ளது. ஓய்வு எடுப்பதற்காக பைடன் அவரது மனைவியுடன் சென்று இங்குத் தங்கி இருந்தார்.  அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடும் அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

ஆயினும் அவரது மாளிகை மீது ஒரு விமானம் பாதுகாப்பு எல்லையை மீறி உள்ளே நுழைந்தது.  இதையொட்டி உஷாரான விமான படை அதிகாரிகள் விமானத்தை இடைமறித்து திசை திருப்பினர்.. அமெரிக்க பாதுகாப்பு வட்டாரம் இது குறித்து, ”அமெரிக்க அதிபர் இருக்கும் இடம் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது.ஆயினும் தவறான சிக்னல் காரணமாக இந்த விமானம் வந்திருக்கலாம் என தெரிகிறது. 

இந்த விமானம் விமான வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் வந்துள்ளது. இருந்தாலும் அந்த தனியார் விமான பைலட்டிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம் ” எனத் தெரிவித்துள்ளனர்.  அமெரிக்க அதிபர் மாளிகை மீது பறந்த விமானத்தால் பாதுகாப்புப் படையினர் சில நிமிடங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.