தேச பாதுகாப்பின் நலனுக்காக, அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து அறிக்கையிடும்போது, மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
தகவல்களை மேற்கொள்ளக்காட்டி வெளியிடப்படும், குறிப்பாக: நிகழ்நேர ஒளிபரப்பு, காட்சிகளை ஒளிபரப்புவது அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது ராணுவத்தினரின் இயக்கம் தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.
முக்கியமான தகவல்களை முன்கூட்டியே வெளியிடுவது, கவனக்குறைவாக விரோதப் போக்கிற்கு உதவக்கூடும் மற்றும் செயல்பாட்டு செயல்திறன் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறியுள்ளது.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியால் அவ்வப்போது வெளியிடப்படும் தகவலை மட்டுமே ஊடகங்கள் ஒளிபரப்பு செய்ய கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.