டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் 75வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ள நிதிஅமைச்சர் வரி சம்பந்தமான பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

வருமான வரி அறிக்கை தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 6.48 கோடியாக அதிகரித்துள்ளது.

மூத்த வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்த அமைச்சர், 75 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், எஃப்.டி.ஆரிடமிருந்து ஓய்வூதியம் மற்றும் வட்டி மட்டுமே கொண்டவர்கள், வருமானத்தை தாக்கல் செய்ய தேவையில்லை என்றார்.

தங்கத்துக்கான இறக்குமதி வரி விதிப்பு 12.5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரிகளை பகுத்தறிவு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எஃகு ஸ்கிராப்புக்கு வரி  விலக்கு

காப்பர் ஸ்கிராப் வரி 5% முதல் 2.5% வரை குறைக்கப்பட்டுள்ளது.

சோலார் பேனர்கள்,  சில வாகன பாகங்கள் மீது சுங்க வரி, உயர்த்தப்படுகிறது.

மூல பட்டு, பருத்தி மீது சுங்க வரி உயர்த்தப்படும்,

உள்கட்டமைப்பு துறையில் அதிக வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக விதிமுறைகளை தளர்த்த அரசு முன்மொழிகிறது:

இந்தியா திரும்பும் என்.ஆர்.ஐ சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அவர்கள் அங்கும், இங்கும் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது. இந்த  இரட்டை வரிவிதிப்பை அகற்ற விதிகளை திருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்டப் நிறுவனங்களான  வரி தளர்வு மேலும்  ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

வரி தொடர்பான வழக்குகளை 6 ஆண்டுகளிலிருந்து 3 வருடங்களுக்கு மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை அரசு குறைக்கிறது

ஒப்பந்த மோதல்களை விரைவாக தீர்ப்பதற்கான சமரச அமைப்பு ஒன்றை நிறுவன அரசு முன்மொழிகிறது.

கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை படைத்துள்ளோம்

கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு

2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது

5ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 41% பங்கு

பிஎஃப் பங்கு தொகையை தாமதமாக செலுத்துவதற்கான அபராதம் இனி இல்லை

உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும்

செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும்

மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்