ஐ.நா:

புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இரங்கலைத் தெரிவித்துள்ளது.


வீரர்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஆறுதலை தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், எந்த வடிவில் தீவிரவாதம் வந்தாலும், அது உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.
தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அனைத்து நாடுகளும் ஆதரவாக இருக்க வேண்டும்.

தீவிரவாத கிரிமினல் நடவடிக்கையை ஏற்க முடியாது. அதனை நியாயப்படுத்தவும் முடியாது என்று கூறப்பட்டுள்ளது.