வாஷிங்டன்

மெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

அமெரிக்கா  ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யாவுக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ளது.   தற்போது  உக்ரைன் விவகாரத்திலும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.   தற்போது உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் 7 நாட்களாகியும் போர் தொடர்ந்து வருகின்றது.

இதையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில்,

“அமெரிக்கா ஆகிய நாங்கள் உக்ரேனிய மக்களுடன் துணை நிற்கிறோம்.  எனவே நாமும் நமது நட்பு நாடுகளும் நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் நமது கூட்டு சக்தியின் முழு பலத்துடன் பாதுகாக்கும்.  போரில் உக்ரேனியர்கள் தூய்மையான தைரியத்துடன் போராடுகிறார்கள்.   இந்த போரின் மூலம் புதின் போர்க்களத்தில் ஆதாயங்களைப் பெறலாமே தவிர நீண்ட காலத்திற்கு அவர் தொடர்ந்து அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

ரஷ்ய தன்னலக்குழுக்களின் குற்றங்களைக் கண்காணிக்க அமெரிக்க நீதித்துறை ஒரு பிரத்யேக பணிக்குழுவைக் கூட்டி வருகிறது. நாங்கள் அனைத்து ரஷிய விமானங்களுக்கும் அமெரிக்க வான்வெளியை மூடி எங்கள் கூட்டு நாடுகளுடன் இணைவோம்.கடந்த ஆண்டு அமெரிக்காவில் 6.5 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்கியது.  ஒரு வருடத்தில் முன்பை விட அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவ்வை ராணுவ டாங்கிகளுடன் புதின்  சுற்றி வரலாமே தவிர உக்ரேனிய மக்களின் இதயங்களை அவர் ஒருபோதும் பெறமாட்டார். அவர் சுதந்திர உலகின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது.   ஒரு வெளிநாட்டை ஒரு ரஷிய சர்வாதிகாரி ஆக்கிரமித்ததால், உலகம் முழுவதும் செலவுகள் அதிகரித்துள்ளது.  தற்போது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போரில், ஜனநாயகம் தற்போது உயர்ந்து வருகிறது”

 எனத் தெரிவித்துள்ளார்.