புதுடெல்லி:
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருகிறார் என்றும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக அவர் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel