துபாய்: ஐக்கிய அரபு அமீரக நாட்டில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை, ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்டனர் அந்நாட்டு காவல்துறையினர்.

தற்போதைய சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்திலும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் காவல்துறையினர், கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹெலிகாப்டரில் ‘வீட்டிலேயேஇருங்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. பிரசாரத்தின்போது, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.