தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவித்துள்ளார்.
நாளை அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர மற்ற அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையட்டி, திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் நோன்பு இருந்து முருகனை தரிசித்து வருகின்றனர். மேலும் தினசரி பல ஆயிரம் பக்தர்கள் செந்தூர் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.
இநத் நிலையில், கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகின்ற 27.10.2025 அன்று நடைபெறுகிறது. அதையடுத்த நாளான 28.10.2025 அன்று திருக்கல்யாண வைபமும் நடைபெற உள்ளத. இதையொட்டி, திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், இரண்டு நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, வருகின்ற 26.10.2025 மற்றும் 27.10.2025 ஆகிய இரு தினங்கள் திருச்செந்தூர் பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
26, 27 ஆகிய இரண்டு தினங்களில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
https://patrikai.com/kanda-sashti-festival-begins-in-tiruchendur-murugan-temple/