காபூல்: 
ப்கானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் டிவிட்டர் தொடர்ந்து செயல்படும் என்றும்  விதி மீறல்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என்றும்,  மக்கள் டிவிட்டர் மூலம் உதவியை நாடி வருகின்றனர், இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் எங்கள் முன்னுரிமை அளிப்போம் என்று டிவிட்டர் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.