2019 ம் ஆண்டு  ட்விட்டர் சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் மீது அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதை அடுத்து ஏராளாமான மாற்றங்களை செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக 2024 ம் ஆண்டு முதல் X (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் மீண்டும் அரசியல் விளம்பரங்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது :

சுதந்திரமான வெளிப்பாட்டின் உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்ப அரசியல் விளம்பரங்கள் விரைவில் அமல்படுத்தப்படும்.

இந்த முயற்சி முதலில் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படும் அதற்கான கொள்கைகள் வெளியிடப்படும்.

தவறான அல்லது தவறான தகவல்களைக் கண்காணிக்க ‘உலகளாவிய விளம்பர வெளிப்படைத்தன்மை மையம்’ அமைக்கப்படும்.

தகுதியான குழுக்கள் மற்றும் பிரச்சாரங்கள் மட்டுமே விளம்பரப்படுத்த முடியும் என்பதை உறுதிசெய்ய வலுவான திரையிடல் செயல்முறைகள் வகுக்கப்படும்.

தேர்தலில் பொது நம்பிக்கையை குலைக்கும் வகையில் தவறான அல்லது தவறான தகவல் உட்பட தவறான அல்லது தவறான உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்துவதைத் தடைசெய்வது இதில் அடங்கும் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் எலான் மஸ்க்-கின் X நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த பரிசாகப் பார்க்கப்படுகிறது.