சென்னை

எதையாவது உளறுவதே சீமானின் வழக்கம் என த வெ க தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருஞ்கிணைப்பாளர் சீமான் தவெக தலைவர் விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து,

: “வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை, என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை எதை எப்படி செய்தால் சரியாக வரும் என்று தெரியாத நான் இந்த வேலைக்கு ஏன் வர வேண்டும்.  பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். எனக்கு நிறைய மூளை இருக்கு. காசு தான் இல்லை. அதனால் எனக்கு அது தேவையில்லை.”

என விமர்சித்தார்.

இதையொட்டி தவெ க கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார்,

”நடைமுறை அரசியல் யதார்த்தம் சீமானுக்கு புரியவில்லை. சமகால சமூக சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பது அவசியம். ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே வியூகமாக கொண்டவர் சீமான் திரள் நிதி பெறும் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனை பெறுவது தவறாக தெரிவதில் ஆச்சரியமில்லை.

ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவதுதான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். வென்றால் மகிழ்ச்சி; தோற்றால் பயிற்சி என எத்தனை காலம் கூறிக் கொண்டிருப்பார் சீமான். சீமானோடு என்றும் தங்களுக்கு ஒத்துப்போகாது.

எனக் கூறியுள்ளார்.