வாஷிங்டன்: டிரம்ப் உத்தரவின்படி சோமாலியா நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டின் உள்நாட்டு படைகளுக்கு அமெரிக்கப் படைகள் பயிற்சி அளிக்கின்றன. அல் கொய்தா உடன் தொடர்பில் உள்ள அல் ஷபாப் தீவிரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்கப் படைகள் களம் இறங்கி வருகின்றன.

இந் நிலையில் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் சோமாலியா நாட்டில் உள்ள அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுவதாக டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.  இதை தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்று கருத தேவையில்லை என்று பென்டகன் கூறி உள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.