திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையம், இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம், முதல் விமானமாக அந்த முனையத்தில் தரையிறங்கியது. அப்போது அந்த, விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும், ரூ.1,112 கோடி மதிப்பிலான திட்டத்தை கடந்த 2019- ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன்படி பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்திற்கு 3 ஆயிரத்து 480 பயணிகளை கையாள முடியும். புதிய முனையத்தில் 104 இமிகிரேசன் கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. nkY;k.  புதிய முனையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது 5 ஏரோ பிரிட்ஜகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மீதமுள்ள 5 ஏரோ பிட்ஜ்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டு அதற்கான நிறைவு பணிகள் நடைபெற்று வந்தது. இதன் பயன்பாட்டிற்கான தேதி நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெறாத காரணத்தினால் செயல்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் ஜூன் 11-ந் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து புதிய விமான நிலையம் முனையத்தின் செயல்பாடுகளை தொடங்கும் வகையில் அதற்கான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்த நிலையில், இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அதன்படி,  இன்று முதல் விமானம், சென்னையில் இருந்து  இண்டிகோ விமானம் திருச்சி புதிய முனையத்திற்கு வந்தடைந்தது.  அப்போது அந்த, விமானத்தின் மீது வழக்கப்படி,  தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது திருச்சி பன்னாட்டு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையமாகும். இதன் மூலம் வருடத்திற்கு 45 லட்சம்   பயணிளை கையாள முடியும் என்றும், ஒரே நேரத்தில் 10 விசமானங்களை கையாளவும், ஒரு மணிநேரத்திற்கு 12 விமானங்களை தரையிறங்கவும், 24 மணி நேரத்தில் 240 விமானங்கள் வந்து செல்ல முடியும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், இதன் காரணமா, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள முனையம் மூப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையம் கடந்த ஆண்டு மட்டும் 17.60 லட்சம் பயணிகள் கையாண்டுள்ளது. இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையம், இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம்  உள்நாடு, வெளிநாடுகளுக்கு அதிக விமானங்கள் சேவை தொடங்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.