சென்னை: தமிழ்நாடு உயர்க்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்  09.09.2021 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2207 காலி இடங்களுக்கான முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி, கம்ப்யூட்டர் ஆசிரியர்களும் தேவை என வெளியிட்டு உள்ளது.

பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம்:

  1. தமிழ் – 271
  2. ஆங்கிலம் -192
  3. கணிதவியல் -114
  4. இயற்பியியல் – 97
  5. வேதியியல் – 191
  6. விலங்கியியல் -109
  7. தாவரவியல் – 92
  8. பொருளாதாரவியல் – 289
  9. வணிகவியல் – 313
  10. வரலாறு – 115
  11. புவியியல் – 12
  12. அரசியல் அறிவியியல் – 14
  13. வீட்டு அறிவியியல் – 03
  14. இந்திய கலாசாரம் – 03
  15. உயிா் வேதியியல் – 01,
  16. உடற்கல்வி இயக்குநா் (நிலை- 1) – 39
  17. கணினி பயிற்றுவிப்பாளா் (நிலை-1) – 44.

சம்பளம்: மாதம் ரூ.36,900 -1,16,600 வழங்கப்படும்.

வயது வரம்பு: ஜூலை 2021-ஆம் தேதி 40 வயதினைக் கடந்தவா்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக ஐந்து ஆண்டுகள் தளா்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 45 வயதுவரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி: ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு வெளியிட்டுள்ள துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். அதாவது தமிழ், ஆங்கிலம், புவியியல், வரலாறு, இந்திய கலாசாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், உயிர்வேதியியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், வீட்டு அறிவியியல், விலங்கியல், கணினியியல் போன்ற பாடங்களில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பற்று, வரவு அட்டைகள் மற்றும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு: மொத்தம் 150 மதிப்பெண்களுக்கான மூன்று மணி நேரம் நடைபெறும் கணினி எழுத்துத் தேர்வு. இதில், 50 சதவிகித மதிப்பெண் பெறுபவா்கள் தகுதி பெற்றவா்கள் ஆவா். எஸ்சி, எஸ்சிஏ பிரிவினா் 45 சதவிகித மதிப்பெண்களும், எஸ்டி பிரிவினா் 40 சதவிகித மதிப்பெண்களும் பெற்றால் தகுதி பெற்றவர்கள் ஆவர். ஆசிரியா்கள் நியமனத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறை அரசு விதிகளின்படி பின்பற்றப்படும். தமிழ் வழி கல்வி பயின்றவர்கள் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2021 நவம்பர் 13,14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 16.09.2021

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2021

மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பான http://trb.tn.nic.in/pg2021/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

முழு விவரம் காண கீழே உள்ள லிங்-ஐ ஓப்பன் செய்து பார்க்கலாம்.

trp notification