டெல்லி: நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இப்போது 7ம் கட்ட ஊரடங்கு நடைமுறையி இருக்கிறது. தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் ரயில் போக்குவரத்து மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் சேவை, மெட்ரோ ரயில் என அனைத்து வித ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இந் நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு கட்டுகடங்காமல் உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் நாடு முழுவதும் புறநகர் ரயில் சேவையும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருக்கும். மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.