சென்னை:  சென்னை பெசன்ட் நகரில் கடலில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடல்களில், விடுமுறை தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியர்வகள் எச்சரிக்கையை மீறி குளித்து வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் பல முறை தடுத்தாலும், பாதுகாப்பு காவலர்கள் இல்லாத நேரங்களில் கடலில் குளித்து மகிழ்கின்றனர்.

இநத் நிலையில், இன்று காலை  சென்னை பெசன்ட் நகர்  கடற்கரை வந்த கல்லூரி மாணவர்கள் சிலர் அங்குள்ள கடலில்  குளித்து மகிழ்ந்தனர். அப்போது கடலில் தோன்றிய ராட்ச அலையில் சிக்கி  மூன்று மாணவர்கள்  கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டனர். இதுகுறித்து சக மாணவர்கள், கூக்குரல் எழுப்பினர். உடனே அக்கம் பக்கம் உள்ள மீனவர்கள் உள்பட சிலர் அவர்களை தேடும் பணியில் ஈட்டனர்.

அப்போது, இரண்டு   கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஒருவர் உயிரிருடன் மீட்கப்பட்டார். உயிரிழந்த  தனியார் கல்லூரி  மாணவர்கள் பெயர்,  கவின் பிரசாத், ரோஹித்  என்று கூறப்படுகிறது. உயிர் பிழைத்த   மாணவன் முகமது ஆதில் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.