சென்னை:
சென்னையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி கடந்த 10 நாட்களில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை ரூ.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாத 5,096 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel