சென்னை
ரயில் தண்டவாளம் அமைப்பு பணிகளால் இன்று முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் 3 மாதக் காலத்துக்குப் போக்குவரத்து மாற்றப்படுகிறது.

நேற்று சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4 ஆவது ரயில் இருப்புப் பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
நாளை அதாவது இன்று இரவு 10 மணி முதல் 3 மாதக் காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக பின்வருமாறு செயல்பாட்டிற்கு வரும்.
ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது.
அதற்குப் பதிலாக, அவை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை→அணுகு சாலை → வடக்கு கோட்டை சாலை (NFS Road)→ R.A Mandram → முத்துசாமி சாலை → முத்துசாமி பாலம் → வாலாஜா பாயிண்ட் கொடி மரச் சாலை →போர் நினைவுச்சின்னம் வழியாகக் காமராஜர் சாலையை அடையலாம்.
காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல் இயக்கப்படும்.”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.