நியூபோல்ட் லாண்ட், கனடா

டலில் மூழ்கி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் பாகங்களைப் பார்வையிடச் சென்ற பயணிகள் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போய் உள்ளது.

கடந்த 1912 ஆம் வருடம் இங்கிலாந்தில் இருந்து 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது. இது பனிப்பாறை மீது மோதி இரண்டாக உடைந்து அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

இவ்வாறு உலக வரலாற்றில் மிகவும் மோசமான கப்பல் விபத்தாக பார்க்கப்படும் டைட்டானிக் விபத்தில் 1 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதைந்த  பாகங்கள் 1985ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

நீர்முழ்கி கப்பலில் சென்று அட்லாண்டிக் கடலின் அடி ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை ஆய்வாளர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கின்றனர். சுற்றுலாப் பயணிகளும் நீர்மூழ்கிக் கப்பலில் சென்று டைட்டானிக் கப்பலின் சிதைந்த பார்க்க சில கப்பல் நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த 16ஆம் தேதி அன்று கனடா நாட்டின் நியூபோல்ட்லேண்ட் மாகாணத்தில் இருந்து டைட்டன் என்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைப் பார்வையிடச் சென்றது. இதில் இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் உள்பட 5 பேர் பயணித்தனர்.

கடந்த 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நியூபவுண்ட்லேண்ட் பகுதியில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கடலில் நீர்மூழ்கிக் கப்பல் பயணித்தபோது ரேடார் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.  கனடா, அமெரிக்கக் கடற்படையினர் மாயமான நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் 96 மணி நேரத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் உள்ள நிலையில் கப்பல் புறப்பட்டு ஏற்கனவே 32 மணி நேரம் ஆகிவிட்டது. கப்பலில் இன்னும் 64 மணி நேரம் ஆக்சிஜன் விநியோகம் எஞ்சியுள்ளது.  இதுவரை நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 பேர் நிலை என்ன என்று தெரியவில்லை.  மாயமான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.