சென்னை தமிழக முதல்வராக வரும் வெள்ளிக்கிழமை ஸ்டாலின் பதவி ஏற்க உள்ள நிலையில், அன்றைய தினம் மாலை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு கூட்டம் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் பகுதி நேர ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் விவாதிக்க உள்ளதாக கூறப்ட்டுள்ளது.

மேலும்,  மே 6 முதல் 20 காலை வரை பூட்டுதலைக் கண்காணிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஜெயராம் மற்றும் சாரங்கன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வனிதா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.