திருப்பூர்
நாளை தமிழக ஆளுநர் திருப்பூருக்கு வந்து மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு சூரஜ் திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. நாளை இதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இதனைத் தொடங்கி வைக்கிறார். திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாளை மாலை 3.45 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
நாளை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆளுநர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடைந்து உள்ளதா என்பது குறித்து நாளை ஆளுநர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
[youtube-feed feed=1]