திருப்பதி

நாளை பிரதமர் மோடி திருப்பதிக்கு வருகிறார்.

வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அங்குத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.  இந்த மாநிலத்தில் பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி உள்ளது.  

பாஜக சார்பில் பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி நாளை மாலை 7.00 மணிக்குத் திருப்பதி வருகிறார். பிரதமர் மோடியை ரேனிகுண்டா விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

மோடி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்குச் சென்று அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்., திங்கட்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் மோடி தரிசனம் முடிந்து காலை 10.25 மணிக்கு விமான நிலையம் செல்கிறார்.

அங்கிருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் டில்லி செல்ல உள்ளார்  நாளை. பிரதமர் மோடி திருப்பதி வருவதையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.