பிரயாக் ராஜ்
நாளை திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராட உள்ளார்.
கடந்த 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
இதையொட்டிக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி, 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். அப்போது,பிரதமர் மோடி துறவிகளுடன் கலந்துரையாடுவார் என்றும், மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் கோடிக்கணக்கான யாத்ரீகர்களுக்கான ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.