சென்னை

நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது,

ஏராளமானோர் ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்கின்ற்னர். இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள், யில்கள் இயக்கப்படுவதால் பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கு ஏதுவாக மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  அதாவது காலை 8 முதல் 11 வரை, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மேலும் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை, காலை 11மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்  எனவும் 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.