திருச்சி
நாளை ஒரு நாள் மட்டும் திருச்சி – மயிலாடுதுறை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது

தெற்கு ரயில்வே வின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி,
”மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் ரோடு- வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் வண்டி எண்:16847 மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மயிலாடுதுறையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு செல்லும். மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாது. இந்த ரயில் கூடுதலாக புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
என்று தெரிவித்து உள்ளார்.