சென்னை
நாளை தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதாவது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel