சென்னை

நாளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது மேல்படிப்புக்காக லண்டன் செல்கிறார்.

பாஜக. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தலைமையில் தனி அணியை உருவாக்கியதுடன், பா.ம.க., த.மா.கா ஆகிய கட்சிகளையும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களையும் ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆயினும் தமிழகத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் தோல்வியை அடைந்தது. ஆனால் ஒரு சில தொகுதிகளில் அ.தி.மு.கவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது.

எனவே 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவதை குறிக்கோளாக வைத்து அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். தற்போது அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, அண்ணாமலை லண்டனில் படிக்க செல்ல உள்ளார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் ஆவார்.

பல்கலைக்கழகமே அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக் கொண்டுள்ளது. அண்ணாமலை நாளை  இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்கிறார். லண்டனில் 3 மாதங்கள் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்ப உள்ளார்.