சென்னை

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்துள்ளது..

வழக்கமான வழித்தடங்களில் இந்த சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..  நாளை வார இறுதி நாட்களையொட்டி தமிழகம் முழுவதும் நாளை 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அதாவது சென்னையில் இருந்து கூடுதலாக 300 பேருந்துகளும், பெங்களூரு, கோவை, மதுரை உள்ளிட்ட மற்ற இடங்களில் இருந்து கூடுதலாக 300 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .