சென்னை

ரும் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது

நாடெங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன.இதில் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜுன் மாதம் தேர்தல் காரணமாக ஒரு சில சுங்கச்சாவடிகளில் மட்டும் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. அப்போது 5 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம்தேதி முதல் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் இந்த சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியது வரும் எனச் சொல்லப்படுகிறது.