சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 510 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,39,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,367 பேர் உயிர் இழந்து 8,22,468 பேர் குணம் அடைந்து தற்போது 4,517 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,31,563 பேர் பாதிக்கப்பட்டு 4,110 பேர் உயிர் இழந்து 2,25,869 பேர் குணம் அடைந்து தற்போது 1,584 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,500 பேர் பாதிக்கப்பட்டு 671 பேர் உயிர் இழந்து 53,407 பேர் குணம் அடைந்து தற்போது 422 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,607 பேர் பாதிக்கப்பட்டு 768 பேர் உயிர் இழந்து 50,544 பேர் குணம் அடைந்து தற்போது 295 பேர் சிகிச்சையில் உள்ளனர்.