சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 811 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,188 .பேர் உயிர் இழந்து 8,03,328 பேர் குணம் அடைந்து தற்போது 7,808 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,26,937 பேர் பாதிக்கப்பட்டு 4,035 பேர் உயிர் இழந்து 2,20,575 பேர் குணம் அடைந்து தற்போது 2,327 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 52,821 பேர் பாதிக்கப்பட்டு 658 பேர் உயிர் இழந்து 51,418 பேர் குணம் அடைந்து தற்போது 745 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,362 பேர் பாதிக்கப்பட்டு 749 பேர் உயிர் இழந்து 49,200 பேர் குணம் அடைந்து தற்போது 413 பேர் சிகிச்சையில் உள்ளனர்.