சென்னை

மிழகத்தில்  இன்றைய (25/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,779 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,73,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,641 பேர் உயிர் இழந்து 8,50,091 பேர் குணம் அடைந்து தற்போது 10,487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 664 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,43,954 பேர் பாதிக்கப்பட்டு 4,218 பேர் உயிர் இழந்து 2,35,654 பேர் குணம் அடைந்து தற்போது 4,082 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 57,718 பேர் பாதிக்கப்பட்டு 689 பேர் உயிர் இழந்து 56,093 பேர் குணம் அடைந்து தற்போது 936 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 54,976 பேர் பாதிக்கப்பட்டு 807 பேர் உயிர் இழந்து 53,081 பேர் குணம் அடைந்து தற்போது 1,088 பேர் சிகிச்சையில் உள்ளனர்.