சென்னை

மிழகத்தில்  இன்றைய (18/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 989 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,63,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,573 பேர் உயிர் இழந்து 8,44,568 பேர் குணம் அடைந்து தற்போது 6,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,40,245 பேர் பாதிக்கப்பட்டு 4,190 பேர் உயிர் இழந்து 2,33,661 பேர் குணம் அடைந்து தற்போது 2,394 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,814 பேர் பாதிக்கப்பட்டு 686 பேர் உயிர் இழந்து 55,587 பேர் குணம் அடைந்து தற்போது 541 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 53,964 பேர் பாதிக்கப்பட்டு 797 பேர் உயிர் இழந்து 52,622 பேர் குணம் அடைந்து தற்போது 545 பேர் சிகிச்சையில் உள்ளனர்.