சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 257 பேரும் கோவையில் 514 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4,506 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,79,696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 32,619 பேர் உயிர் இழந்து 24,08,886 பேர் குணம் அடைந்து தற்போது 38,191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,32,529 பேர் பாதிக்கப்பட்டு 8,187 பேர் உயிர் இழந்து 5,21,221 பேர் குணம் அடைந்து தற்போது 3,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 514 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 420 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,19,504 பேர் பாதிக்கப்பட்டு 2,041 பேர் உயிர் இழந்து 2,13,227 பேர் குணம் அடைந்து தற்போது 4,236 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,56,884 பேர் பாதிக்கப்பட்டு 2,358 பேர் உயிர் இழந்து 1,52,485 பேர் குணம் அடைந்து தற்போது 2,041 பேர் சிகிச்சையில் உள்ளனர்.