சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 410 பேரும் கோவையில் 870 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 6,895 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,36,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 31,580 பேர் உயிர் இழந்து 23,48,353 பேர் குணம் அடைந்து தற்போது 56,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,30,034 பேர் பாதிக்கப்பட்டு 8,095 பேர் உயிர் இழந்து 5,18,588 பேர் குணம் அடைந்து தற்போது 3,351 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று அரசு வெளியிட்ட தகவலில் தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையில் 2012 பேர் தவறுதலாக குணம் அடைந்தோர் பட்டியலில் பதியப்பட்டுள்ளது.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 870 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 741 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,14,256 பேர் பாதிக்கப்பட்டு 1,930 பேர் உயிர் இழந்து 2,03,953 பேர் குணம் அடைந்து தற்போது 8,373 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,54,709 பேர் பாதிக்கப்பட்டு 2,323 பேர் உயிர் இழந்து 1,50,447 பேர் குணம் அடைந்து தற்போது 1,939 பேர் சிகிச்சையில் உள்ளனர்.