சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 211 பேரும் கோவையில் 236 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,933 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,84,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,462 பேர் உயிர் இழந்து 25,30,096 பேர் குணம் அடைந்து தற்போது 20,411 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,40,739 பேர் பாதிக்கப்பட்டு 8,352 பேர் உயிர் இழந்து 5,30,289 பேர் குணம் அடைந்து தற்போது 2,098 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 236 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,32,351 பேர் பாதிக்கப்பட்டு 2,212 பேர் உயிர் இழந்து 2,27,781 பேர் குணம் அடைந்து தற்போது 2,358 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,63,491 பேர் பாதிக்கப்பட்டு 2,414 பேர் உயிர் இழந்து 1,59,908 பேர் குணம் அடைந்து தற்போது 1,169 பேர் சிகிச்சையில் உள்ளனர்.