சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 219 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,957 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,63,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,130 பேர் உயிர் இழந்து 25,09,029 பேர் குணம் அடைந்து தற்போது 20,385 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,38,521 பேர் பாதிக்கப்பட்டு 8,321 பேர் உயிர் இழந்து 5,28,465 பேர் குணம் அடைந்து தற்போது 1,735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 219 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,29,804 பேர் பாதிக்கப்பட்டு 2,178 பேர் உயிர் இழந்து 2,25,618 பேர் குணம் அடைந்து தற்போது 2,008 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,62,215 பேர் பாதிக்கப்பட்டு 2,405 பேர் உயிர் இழந்து 1,58,647 பேர் குணம் அடைந்து தற்போது 1,163 பேர் சிகிச்சையில் உள்ளனர்.