சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 130 பேரும் கோவையில் 177 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,830 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,44,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,862 பேர் உயிர் இழந்து 24,86,192 பேர் குணம் அடைந்து தற்போது 24,816 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,36,883 பேர் பாதிக்கப்பட்டு 8,305 பேர் உயிர் இழந்து 5,26,945 பேர் குணம் அடைந்து தற்போது 1,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 177 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,27,825 பேர் பாதிக்கப்பட்டு 2,151 பேர் உயிர் இழந்து 2,23,381 பேர் குணம் அடைந்து தற்போது 2,293 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,61,129 பேர் பாதிக்கப்பட்டு 2,390 பேர் உயிர் இழந்து 1,57,472 பேர் குணம் அடைந்து தற்போது 1,267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.