சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 148 பேரும் கோவையில் 256 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 2,405 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,28,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,606 பேர் உயிர் இழந்து 24,65,250 பேர் குணம் அடைந்து தற்போது 29,950 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,35,747 பேர் பாதிக்கப்பட்டு 8,279 பேர் உயிர் இழந்து 5,25,835 பேர் குணம் அடைந்து தற்போது 1,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 256 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,26,151 பேர் பாதிக்கப்பட்டு 2,122 பேர் உயிர் இழந்து 2,20,576 பேர் குணம் அடைந்து தற்போது 3,453 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,59,947 பேர் பாதிக்கப்பட்டு 2,380 பேர் உயிர் இழந்து 1,56,451 பேர் குணம் அடைந்து தற்போது 1,116 பேர் சிகிச்சையில் உள்ளனர்.