சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 249 பேரும் கோவையில் 498 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4,481 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,84,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 32,721 பேர் உயிர் இழந்து 24,13,930 பேர் குணம் அடைந்து தற்போது 37,526 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,32,759 பேர் பாதிக்கப்பட்டு 8,191 பேர் உயிர் இழந்து 5,21,637 பேர் குணம் அடைந்து தற்போது 2,931 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால்  இன்று இங்கு 498 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 411 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,20,005 பேர் பாதிக்கப்பட்டு 2,051 பேர் உயிர் இழந்து 2,14,149 பேர் குணம் அடைந்து தற்போது 3,865 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,57,085 பேர் பாதிக்கப்பட்டு 2,361 பேர் உயிர் இழந்து 1,52,827 பேர் குணம் அடைந்து தற்போது 1,897 பேர் சிகிச்சையில் உள்ளனர்.