சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 275 பேரும் கோவையில் 563 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4,512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,75,190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 32,506 பேர் உயிர் இழந்து 24,03,349 பேர் குணம் அடைந்து தற்போது 39,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,32,272 பேர் பாதிக்கப்பட்டு 8,172 பேர் உயிர் இழந்து 5,20,793 பேர் குணம் அடைந்து தற்போது 3,307 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 563 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 493 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,18,990 பேர் பாதிக்கப்பட்டு 2,029 பேர் உயிர் இழந்து 2,12,285 பேர் குணம் அடைந்து தற்போது 4,676 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,56,677 பேர் பாதிக்கப்பட்டு 2,352 பேர் உயிர் இழந்து 1,52,134 பேர் குணம் அடைந்து தற்போது 2,191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.