சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 350 பேரும் கோவையில் 698 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5,755 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,55,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 32,051 பேர் உயிர் இழந்து 23,75,963 பேர் குணம் அடைந்து தற்போது 47,318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 350 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,31,127 பேர் பாதிக்கப்பட்டு 8,143 பேர் உயிர் இழந்து 5,19,373 பேர் குணம் அடைந்து தற்போது 3,611 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 698 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 597 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,16,506 பேர் பாதிக்கப்பட்டு 1,994 பேர் உயிர் இழந்து 2,07,791 பேர் குணம் அடைந்து தற்போது 6,721 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,55,696 பேர் பாதிக்கப்பட்டு 2,336 பேர் உயிர் இழந்து 1,51,023 பேர் குணம் அடைந்து தற்போது 2,337 பேர் சிகிச்சையில் உள்ளனர்.