சென்னை
இன்று சென்னையில் எண்ணூர் துறைமுகம் மற்றும் மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ஆகிய இடங்களில் போர்க்கல ஒத்திகை நடைபெற உள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு இந்தியாவில் கடைசியாக போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்ட. பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேற்று 244 இடங்களில் போ போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
ஒத்திகையின் போது மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை நடத்தப்படும். குறிப்பாக வான்வழி தாக்குதலின்போது ஒலிக்கப்படும் சைரன் ஒலிப்புகளை எழுப்பியும் சில பொது இடங்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டும் ஒத்திகை நடைபெற்றது.
இன்று , சென்னையில் 2 இடங்களில் போர் சூழல் ஒத்திகை நடைபெறும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒத்திகை நடக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சக அறிவுரைப்படி இன்று மாலை 4 மணிக்கு ஒத்திகை நடைபெறும். ஒத்திகை குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம். பிற அனைத்து செயல்பாடுகளும் இயங்கும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.