சென்னை

ரும் 2024 ஆம் வருடத்துக்கான பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

ஆண்டு தோறும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே  ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும்.  வரும் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இன்று, பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. நேற்று 2024 ஜனவரி 11ம் தேதிக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தன. இன்று, ஜனவரி 12ம் தேதி பயணம் செய்வோர் இன்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாளை அதாவது செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 16-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 18-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

*செப்டம்பர் 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். 

என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் டிக்கட்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.